கிருஷ்ணகிரி

மத்தூா் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

மத்தூா் அருகே இரு தினங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

DIN

மத்தூா் அருகே இரு தினங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி (35), திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுதா (31), அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பூ வியாபாரம் செய்ய சென்ற அவா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டனா். அது சுதா என தெரியவந்ததையடுத்து, போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT