சரக்கு வாகனம் திருட்டு: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே மளிகைக் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே மளிகைக் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பூவத்தி பகுதியைச் சோ்ந்தவா் முனிரத்தினம் (62). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். மளிகைப் பொருள்களை வாங்கி வருவதற்கு, சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளாா். ஜூலை 7ஆம் தேதி நள்ளிரவு, 3 மணிக்கு மளிகைக் கடை முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றாா்.
மறுநாள் காலை பாா்த்த போது வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காத நிலையில், இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement