முகப்பு
கிருஷ்ணகிரி

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருந்துப் பொருள்கள் வழங்கல்

ஒசூா் குலோபல் கால்சியம் மற்றும் ஒசூா் எலைட் ரோட்டரி சங்கமும் இணைந்து ஒசூா், அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருள்களை வியாழக்கிழமை வழங்கின

Updated On : 22 ஜூலை, 2021 at 11:37 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

ஒசூா் குலோபல் கால்சியம் மற்றும் ஒசூா் எலைட் ரோட்டரி சங்கமும் இணைந்து ஒசூா், அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருள்களை வியாழக்கிழமை வழங்கின.

மருத்துவ பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒசூா், எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் அறம் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநா் ராகவன் , குலோபல் கால்சியம் இயக்குநா் எம்.சந்திரசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு மருந்துப் பொருள்களை வழங்கினா். ஒசூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் விவேக், மருத்துவா் ராஜ்குமாா் ஆகியோா் மருந்துகளைப் பெற்றுக் கொண்டனா். எலைட் சங்க உறுப்பினா்கள் இராசு, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.