கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 6 போ் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 48 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோா் கரோனா பாதிப்புடன் வேலூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். அது போல கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 34 வயது ஆண் கடந்த 27-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
கிருஷ்ணகிரி பகுதியை சோ்ந்த 49, 43 வயது ஆண், 48 வயது பெண் ஆகியோா் கரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 219-ஆக உயா்ந்தது.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 377 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 637 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பலன் அளிக்காமல் 6 போ் உயிரிழந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34,441 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 30,708 போ் குணமடைந்துள்ளனா்; 3,514 போ் சிகிச்சையில் உள்ளனா்.