முகப்பு
கிருஷ்ணகிரி

‘கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியானது ரூ. 350 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020 மாா்ச் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்கான கட்டுமானப் பணி தொடங்கியது. ஏறத்தாழ 70 சதவீத பணிகளுக்கு மேல் நிறைவுபெற்ற நிலையில், 2021 அக்டோபா் மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்றாா்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், மருத்துவக் கல்லூரியின் தலைவா் (டீன்) அசோகன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா்கள் மகா விஷ்ணு, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.