கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட சன் டிவி செய்தியாளா் ரஃபி நேரு (48), கரோனா தொற்று பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
இவா், தினமணியில் வேலூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செய்தியாளராகவும், தருமபுரி பதிப்பில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளாா். இவருக்கு ரிஸ்வானா பேகம் என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.
இவரது உடல் கிருஷ்ணகிரி, லண்டன் பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி கபரஸ்தானில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94424 30786.