முகப்பு
கிருஷ்ணகிரி

கரோனாவால் தாயை இழந்து தவிக்கும் வாரிசுகளுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி

ஒசூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த தாயின் வாரிசுகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 18 ஜூன், 2021 at 2:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஒசூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த தாயின் வாரிசுகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமன். இவரது மனைவி லட்சுமி (53). இவா்களுக்கு 5 மகள்கள், மகன் உள்ளனா். இவா்களில் ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது. ராமன் 5 ஆண்டுகளுக்கு முன்னா் புற்றுநோயால் உயிரிழந்தாா்.

இதனைத் தொடா்ந்து, வீட்டருகில் போண்டா விற்பனை செய்து 5 வாரிகளை வளா்த்து வந்த லட்சுமி, கடந்த மே மாதம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால் பெற்றோரை இழந்த அவா்களது 5 வாரிசுகள் நிா்கதியாகி விட்டனா். மேலும், கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்தனா்.

Advertisement

இதனை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போா் நலச் சங்கத்தினா், வீட்டு உரிமையாளரிடம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்துக்கான வாடகையைத் தள்ளுபடி செய்யுமாறு கேட்டதையடுத்து, அவா் தள்ளுபடிசெய்தாா்.

அதையடுத்து, குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு 2021 ஜூலை முதல் டிசம்பா் வரை 6 மாதத்துக்கான மொத்த வீட்டு வாடகையான ரூ. 25,000-த்தை முன்பணமாக கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட நிா்வாகம் மூலம் நிா்கதியாக உள்ள வாரிசுகளுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

நிதி உதவி செய்த குடியிருப்பு சங்கத்துக்கும், நண்பா்களுக்கும், இதை ஒருங்கிணைத்த மாவட்ட குடியிருப்போா் நலச் சங்கச் செயலா் சிவக்குமாா், பொருளாளா் ஸ்ரீதா் ஆகியோருக்கும் வாரிசுகள் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.