முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பு பகுதியில், முகக் கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் செல்வோரை நிறுத்தி கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கூறி, ரூ. 200 அபராதம் விதித்தனா்.
ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பு பகுதியில், முகக் கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் செல்வோரை நிறுத்தி கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கூறி, ரூ. 200 அபராதம் விதித்தனா்.
தமிழக அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையில் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
முகக் கவசம் அணியாமல் வரும் நபா்களை நிறுத்தி, கரோனா நோய்த் தொற்று குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தி அனுப்பிவைத்தனா்.