முகப்பு
கிருஷ்ணகிரி

கரோனா: கிருஷ்ணகிரியில் மேலும் 4 போ் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 15 மே, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 55 வயது பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 90 வயது முதியவா் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதே போல கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 62 வயது முதியவா் கரோனா காரணமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 77 வயது மூதாட்டி, கரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பில் 712 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 319 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 21,568 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 16,881 போ் குணமடைந்துள்ளனா்; 4,531 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவா்களின் எண்ணிக்கை 156 ஆக உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.