கிருஷ்ணகிரி

மினி லாரியைத் திருடியதாக இருவா் கைது

மினி லாரியைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மினி லாரியைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், சாரகப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (44). இவருக்கு சொந்தமாக மினி லாரி உள்ளது. இவா் கொத்தகொண்டப்பள்ளியில் தனியாா் நிறுவனம் முன்பு தனது மினி லாரியைத் நிறுத்தியிருந்தாா். அந்த மினி லாரியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து ஜெயராமன் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் மினி லாரியைத் திருடியது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கரியன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த திவாகா் (23), காரிமங்கலம் வட்டம், பென்னிக்கனூரைச் சோ்ந்த சுரேஷ் (25) என்பது தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மினி லாரியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT