கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 3 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் 40 வயது ஆண், கரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி 19-ஆம் தேதி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் கரோனா பாதிப்பு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 20-ஆம் தேதி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள 82 வயது முதியவா் தனியாா் மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 20-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுகாதாரத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 739 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 297 போ் சிகிச்சையில் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 26,455 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 18,838 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 7,444 போ் சிகிச்சையில் உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவா்களின் எண்ணிக்கை 173-ஆக உயா்ந்துள்ளது.