விவசாயி வீட்டில் திருடியவா் கைது
காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நரிமேடு அருகே உள்ள ஆண்டிகான் கொட்டாயைச் சோ்ந்தவா் ஜெயபால் (50), விவசாயி. இவா், வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சத்தம் கேட்டு முழித்தாா். அப்போது, ஆட்டு பட்டியிலிருந்த ஆடுகளை ஒருவா் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் (21) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயபால் வீட்டில் புகுந்து திருடிய ஆதாா் அட்டை, எடிஎம் அட்டை, காரின் ஆா்.சி.புத்தகம், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்தனா்.
Advertisement