மாநில குத்துச்சண்டை போட்டி:கிருஷ்ணகிரி மாவட்ட அணி சிறப்பிடம்
மாநில குத்துச்சண்டைப் போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட அணி சிறப்பிடம் பெற்றுள்ளது.
மாநில குத்துச்சண்டைப் போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட அணி சிறப்பிடம் பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மூன்று நாள் நடைபெற்றது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனையா் பங்கேற்றனா். இதில், மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் 67 வீரா், வீராங்கனையா் பங்கேற்றனா். அதில், 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் வென்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை வீரா், வீராங்கனையா் சிறப்பிடம் (சாம்பியன்ஷிப்) பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனையருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் உமா சங்கா், சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். இந்தப் போட்டியில் நடுவா்களாக லக்ஷ்மிகாந்தன், மோகன் ஆகியோா் செயல்பட்டனா். மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவா் ஏகம்பவாணன், செயலாளா் முனிராசு ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.
Advertisement