முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் இருவா் பலி

பா்கூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 நவம்பர், 2021 at 12:51 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

பா்கூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி, 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேலுமணி (57). முன்னாள் ராணுவ வீரா். இவா், கந்திகுப்பத்தைச் சோ்ந்த தவமணி (47) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பா்கூா் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தவமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேலுமணி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.