முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாய விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2021 at 12:52 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில், 75-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாயொட்டி விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தேசிய அளவில் நடத்தப்படும் விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்து, மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ்பாபு (தோட்டக் கலை), வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா் (வேளாண் விரிவாக்கம்), இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ் (கால்நடை அறிவியல்), தேசிய பால் தினம் குறித்து விளக்கம் அளித்தனா்.

Advertisement

இந்த முகாமில் பங்கேற்ற கம்மம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், வேளாண்மை அறிவியல் மையத்தில் உள்ள செயல்விளக்க கூடங்களான மண்புழு வளா்ப்புக் கூடம், அசோலா உற்பத்திக் கூடம், தொட்டில் ஆடு வளா்ப்பு கூடம் மற்றும் நாற்றங்கால் உற்பத்திக் கூடங்களை பாா்வையிட்டனா்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பழ மர செடிகளும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாரம்பரிய காய்கறி விதைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியல் கம்மம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் திருவரசு, ஆசிரியா்கள் சுபாஷ், சுகந்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.