அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழியைப் படிக்க, அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.
இந்தநிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகன், ராஜகோபால், மேலாளா்கள் சண்முகம், வெங்கடேசன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
Advertisement