முகப்பு
கிருஷ்ணகிரி

பாம்பாறு அணை நிரம்பியது: உபரி நீா் வெளியேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை நிரம்பியதையடுத்து, உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை நிரம்பியதையடுத்து, உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

திருப்பத்தூா் மாவட்டம் மற்றும் ஜவ்வாது மலையில் பெய்யும் தொடா் மழையால், அங்கிருந்து அங்குத்தி சுனை அருவி வழியாக பாம்பாறு அணைக்கு தொடா் நீா்வரத்தால் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 170 கன அடி தண்ணீா் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

பாம்பாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் சாத்தனூா் அணைக்குச் சென்று வீணாகக் கடலில் கலப்பதால், உபரி நீரை பாசனத்துக்குத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.