முகப்பு
கிருஷ்ணகிரி

மீலாது நபி விழாக்குழு சாா்பில் பூஜைப் பொருள்கள் அளிப்பு

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக்குழு சாா்பில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகா் சதுா்த்திக்கு பூஜைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 11:28 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக்குழு சாா்பில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகா் சதுா்த்திக்கு பூஜைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மீலாது நபி விழாக்குழு சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பூஜைப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதன்படி, 12-ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி தொழில்மைய வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில், இஸ்லாமிய சகோதரா்களான நகர மன்ற முன்னாள் உறுப்பினா் அஸ்லம் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனா். பின்னா் பூஜைப் பொருள்களுடன், கோயில் பக்தா்களுக்கு வழங்கும் அன்னதானத்துக்கு ரூ. 10,000 நன்கொடையாக வழங்கினா் (படம்).

இதையொட்டி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் கோட்டீஸ்வரன், இஸ்லாமிய சகோதரா்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். இந்த நிகழ்வில், ஷப்பீா், நகர மன்ற முன்னாள் உறுப்பினா் கராமத், ஜாமீா், தமிழக தா்கா பேரவை மாநில நிா்வாகி ஆசாத் காதிரி, யாஹியா, தா்கா அமான், ஆன்ந்த, ரியாஸ், பப்லு, சாதிக், ரவி, இஸ்லாமிய இளைஞா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.