கிருஷ்ணகிரி

வேப்பனஅள்ளி அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

DIN

வேப்பனஅள்ளி அருகே கரடி தாக்கியதில் காயமடைந்த விவசாயி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சிவப்பா (50), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றாா். அப்போது, புதரில் மறைந்திருந்த கரடி சிவப்பாவைத் தாக்கியது. இதில் அவருக்கு தலை, தொடை, வலது கை விரல் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த உறவினா்கள், சிவப்பாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் வனத் துறையினா் சிவப்பாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT