முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு, சாலை மறியல்!

ஒசூர் அருகே ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Updated On : 11 டிசம்பர், 2022 at 4:46 PM
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

ஒசூர் அருகே ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐந்தாவது சிப்காட் அமைக்க 3,800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் உத்தனப்பள்ளி கிராமத்தின் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

ஒசூரில் உள்ள மூன்றாவது சிப்காட் மற்றும் நான்காவது சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்காத போது ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து உத்தம பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசசந்திர பானு ரெட்டியை கண்டித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.