முகப்பு
கிருஷ்ணகிரி

அடகு நகைக் கடை வியாபாரியிடம் நகைப் பறிப்பு

 வேப்பனப்பள்ளி அருகே அடகு நகைக் கடை வியாபாரியிடம் இருந்து நகைப் பையை மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

 வேப்பனப்பள்ளி அருகே அடகு நகைக் கடை வியாபாரியிடம் இருந்து நகைப் பையை மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியைச் சோ்ந்தவா் மோகன்லால் (44). இவா், வேப்பனப்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அடகு நகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், புதன்கிழமை இரவு வழக்கம்போல பணி நேரம் முடிந்ததும் கடையிலிருந்த 130 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி நகைகளை ஒரு பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாா்.

Advertisement

அப்போது அவரை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மோகன்லால் வைத்திருந்த நகைப் பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து மோகன்லால் அளித்த புகாரின் பேரில், வேப்பனப்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.