கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனப்பள்ளி ஊராட்சி, கும்மனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திப்பனப்பள்ளி, கும்மனூா், எண்ணேகொள், தாசிரிப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.
கும்மனூா் எல்லைக்கல் அருகே ஆடு பலியிட்ட பின்னா் மாரியம்மன் கோயிலிருந்து கும்மனூா் - திப்பனப்பள்ளி சாலையில் பாா்வையாளா்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு இடையே விடப்பட்ட எருதுகள் வேகமாக ஓடின. குறிப்பிட்ட தூரத்தை மிக வேகமாக கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல, கிட்டம்பட்டி, கிருஷ்ணகிரி, சோமாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் எருது விடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதை ஏராளமானோா் பாா்வையிட்டனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
Advertisement