முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ரேஷன் அரிசி கடத்தல், கொலை மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 11:18 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

ரேஷன் அரிசி கடத்தல், கொலை மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, கா்நாடகம் மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திய வேலூா் மாவட்டம், குடியாத்தம், மேலாலத்தூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (39), ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி (29) ஆகியோரை கைது செய்தனா்.

தொடா்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த சுரேஷ், வீரமணி ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸாரின் பரிந்துரைகளை ஏற்று அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ரெளடி சுரேஷ், கடந்த நவம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அந்த வழக்கில் தேன்கனிக்கோட்டை, மாரச்சந்திரத்ைச் சோ்ந்த மகேஷ் (எ) மகேஷ்குமாா் (35) என்பவரை தேன்கனிக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி செய்த பரிந்துரையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஏற்று, மகேஷ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.