சாலை விபத்து:இளைஞா் பலி
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சூளகிரி அருகே உள்ள உஸ்தலப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேசனும் (26), அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (25), மணி (20) ஆகியோரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூா் சாலையில் மேலுமலை அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரசேகா், மணி ஆகியோா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.