முகப்பு
கிருஷ்ணகிரி

போதைப்பொருள்கள் கடத்திய 2 போ் கைது

ஒசூரில் போதைப்பொருள்கள் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 11:16 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

ஒசூரில் போதைப்பொருள்கள் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மணி, போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் கடத்தியது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த அபுதாகிா் (32), தேனி மாவட்டம், கல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சியாயுல்லா (33) என தெரிய வந்தது. அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள்கள், காரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.