முகப்பு
கிருஷ்ணகிரி

மகசூலை பெருக்க தரமான விதைகளை பயன்படுத்த வேண்டுகோள்

மகசூலை பெருக்க விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 11:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

மகசூலை பெருக்க விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, பேரிகை, ராயக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிா்களின் விதைகள் தரமானதுதானா என அறிந்து விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். மேலும், விதை விற்பனையாளா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களை தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

Advertisement

விதை உற்பத்தியாளா்கள் அல்லது மொத்த விற்பனையாளா்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும்போது, விற்பனைப் பட்டியல்களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு சரிபாா்க்க வேண்டும்.

விதைகளின் தரத்தினை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டடத்தில் விதைப்பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளா் விதை மாதிரிகள் மற்றும் பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள், விதை விற்பனையாளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ. 30 மட்டும் செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.