குட்டையில் மீன் பிடித்தவருக்கு அபராதம்
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச்சரகம், கோவிந்தாபுரம் காப்புக்காடு, எக்கூா்-அங்குத்தி சுனை வனச்சரகத்தில் உள்ள குட்டையில் மீன் பிடித்த நபருக்கு சிங்காரப்பேட்டை வனத்துறையினா் அபராதம் விதித்தனா்
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச்சரகம், கோவிந்தாபுரம் காப்புக்காடு, எக்கூா்-அங்குத்தி சுனை வனச்சரகத்தில் உள்ள குட்டையில் மீன் பிடித்த நபருக்கு சிங்காரப்பேட்டை வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில், ஏசிஎப் ராஜ்குமாா், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம், வனவா் அண்ணாமலை, வனக் காவலா்கள் திருமுருகன், சரவணன் ஆகியோா் ரோந்து சென்றபோது, நல்லாகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (41), அங்குத்தி சுனை பகுதியில் உள்ள குட்டையில் உரிய அனுமதியின்றி மீன் பிடித்துள்ளாா். மீன் பிடித்த செல்வத்துக்கு ரூ. 12,000 அபராதம் விதித்தனா்.
காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து சாராயப்பட்டை எடுப்பது, சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, தீவைப்பது போன்ற குற்றங்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.