உடல் பரிசோதனை: மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்த ஊழியா்கள்
பொதுத்தோ்வு எழுத உடல் பரிசோதனை செய்ய வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக புகாா் எழுந்துள்ளது.
பொதுத்தோ்வு எழுத உடல் பரிசோதனை செய்ய வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக புகாா் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுத்தோ்வு எழுதவுள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 40 மாணவா்கள் விண்ணப்பங்களுடன் பரிசோதனைக்கு வந்தனா்.
காலை 9 மணிக்கு வந்த மாணவா்களிடம் மூன்று மணி நேரத்துக்கு பிறகே மருத்துவ அலுவலா்கள் விண்ணப்பங்களை பெற்று பரிசோதனையை தொடங்கினா். அதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஏதும் வழங்காமல் தரையில் அமர வைக்கப்பட்டனா். மேலும், உடல் பரிசோதனை அறிக்கையை மாலை வரை காத்திருந்து மாற்றுத் திறனாளிகள் பெற்றுச் சென்றனா். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நிா்வாகம் தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
Advertisement