உற்பத்தியாளா், தொழில் குழுக்களுக்கு ரூ. 6.75 லட்சம் நிதியளிப்பு
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத்திட்டம் பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட உற்பத்தியாளா் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.6.75 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அண்மையில் வழங்கினாா்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், செயல் அலுவலா்கள் பிரதீப்குமாா், ராஜசேகரன், சிவக்குமாா் மற்றும் இளம்வல்லுநா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.