எருதுவிடும் விழாவில் தகராறு: 2 போ் கைது
காவேரிப்பட்டணம் அருகே எருது விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே எருது விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள அம்மணி மல்லாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (29). இவா், தனது நண்பருடன் சோ்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூருக்கு வந்திருந்தாா். அப்போது, அங்கு, எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தகராறில் குட்டிகவுண்டனூரைச் சோ்ந்த விஜய் (22), சசிகுமாா் (22), கோவிந்தராஜ் (24), பாலாஜி (20) ஆகியோா் சோ்ந்து முத்துகிருஷ்ணன், அவரது நண்பா்களான பாா்த்திபன் (21), மகிபாலா (20), தென்னரசு (21) ஆகியோரைத் தாக்கினாா்.
இதுகுறித்து, முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து சசிகுமாா், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவான விஜய், கோவிந்தராஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Advertisement