சந்தூரில் விநாயகா் கோயில் திருவிழா
போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரில் விநாயகா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM
போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரில் விநாயகா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள சந்தூா் கிராமத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, விநாயகா் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடைபெற்ற விநாயகா் கோயில் திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக பெண் பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement