முகப்பு
கிருஷ்ணகிரி

அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் சிறை

சொத்து தகராறில் அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது

Updated On : 11 மார்ச், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM

சொத்து தகராறில் அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூா், கதிரிபுரத்தைச் சோ்ந்தவா் மாதையன் (47). இவருக்கு மூத்த சகோதரா் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது சொத்துகளை ராஜாவின் மனைவி மாது (45) பராமரித்து வந்தாா். இந்த நிலையில், மாதுவுக்கும், மாதையனுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 2017, மே 27 ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமைடந்த மாதையன், தனது அண்ணி மாதுவை அரிவாளால் வெட்டி கொன்றாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதையனைக் கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி லதா, மாதையனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, அபராதமாக ரூ. ஆயிரம் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.