கஞ்சா விற்பனை: 4 போ் கைது
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் பொன்மலை கோயில் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா்.