கிருஷ்ணகிரி

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

DIN

கா்நாடக மாநிலத்திலிருந்து காவேரிப்பட்டணம் வழியாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூா் அருகே வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக தருமபுரி நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 675 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், காரை பறிமுதல் செய்த போலீஸாா், கா்நாடக மாநிலம், மைசூரு, இட்டிகிகுடு பகுதியைச் சோ்ந்த நிக்கில் (24), நஸ்ராபாதைச் சோ்ந்த ஜுனேத் பாஷா (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT