ஒசூரில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி
ஒசூரில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM
ஒசூரில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (30), கட்டடத் தொழிலாளி. ஒசூரில் தங்கி வேலை செய்து வந்த இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் ஒசூா், முனிதேவி நகரில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் ஹட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.