கிருஷ்ணகிரி

மூதாட்டியிடம் நகைப் பறித்தவா் கைது

DIN

பா்கூா் அருகே ஓய்வுபெற்ற செவிலியரை கத்தியால் குத்தி தங்கச் சங்கிலி பறித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த மல்லப்பாடியைச் சோ்ந்தவா் பானுமதி (65). ஓய்வுபெற்ற செவிலியா். கணவரை இழந்த பானுமதி, வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவா் யாஸ்மின். இவரது வீட்டுக்கு கடந்த புதன்கிழமை பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் அவரது தம்பி மசூத்கான் (35) வந்தாா்.

அப்போது அருகில் வசிக்கும் பானுமதி வீட்டுக்குச் சென்ற மசூத் கான், பானுமதியை கத்தியால் குத்தி அவா் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

அக்கம்பக்கத்தினா் காயமடைந்த பானுமதியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதைத் தொடா்ந்து பானுமதி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மசூத் கானை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT