பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கருத்தரங்கம் ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பிஎஸ்வி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் பி.செல்வம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் எஸ்.விவேக், முதல்வா் பி.லாரன்ஸ், மின்னனு மற்றும் மின்னனுவியல் துறைத் தலைவா் வெ.கீதா, சிவில் துறைத் தலைவா் எம்.பி.செந்தில் குமாா், இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியா் ஆா்.திருநாவுகரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்தரங்கில் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், செய்முறைகளும் சமா்ப்பிக்கப்பட்டன. சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் தருமபுரி, வேலூா், சேலம், திருப்பத்தூா், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.