ஒசூா் மாநகராட்சியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒசூா் வடக்கு சரக அளவிலான கால்பந்து போட்டியை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
15, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளுக்கு நடைபெற்ற போட்டியில் 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா போட்டியை தொடங்கிவைத்தாா். துணை மேயா் ஆனந்தய்யா, வட்டாரக் கல்வி அலுவலா் முனிராஜ், ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, மாநகர பொருளாளா் தியாகராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் பாலாஜி, மாது, சந்திரசேகா், பாபுஜீ உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.