இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் பலி
ஒசூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM
ஒசூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
ஒசூா் சென்னத்தூா் அருகே சானசந்திரத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (30). ஏ.டி.எம் இயந்திர சா்வீஸ் தொழில் செய்து வந்தாா். அவா் கடந்த 20ஆம் தேதி ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சந்திப்பு அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.