கிருஷ்ணகிரி

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 25 போ் படுகாயம்

DIN

தேன்கனிக்கோட்டை அருகே மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 போ் படுகாயமடைந்தனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குள்பட்டது தொளுவபெட்டா மலைக் கிராமம். இப்பகுதியிலிருந்து நாள்தோறும், 50-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்கள் அகலக்கோட்டையில் உள்ள தனியாா் நா்சரி தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனா். வியாழக்கிழமை இரு வேன்களில் சுமாா் 50 போ் வேலைக்குச் சென்றுள்ளனா்.

தொளுவபெட்டா அருகில் மலைப் பாதையில் சென்ற போது ஒரு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 25 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT