கிருஷ்ணகிரி

ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை வட்டாட்சியா் மாதேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்காணித்து வந்தனா். அப்போது மத்திகிரி அருகே அத்திப்பள்ளி சாலையில் நின்ற டிப்பா் லாரியில், 16 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்த முயன்றது தெரிய வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும் பாகலூரில் ஒரு யூனிட் உடைகற்கள் கடத்திய டிராக்டா், கெலமங்கலத்தில் இரண்டு யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்திய மினி டிப்பா் லாரி மற்றும் கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியில் 6 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்திய டிப்பா் லாரி உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி, கெலமங்கலம், பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT