கிருஷ்ணகிரி

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: சடலத்தை பாதையில் கிடத்தி மறியல்

ஒசூரை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பொதுப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால், மூதாட்டியின் சடலத்தை பாதையில் கிடத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

DIN

ஒசூரை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பொதுப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால், மூதாட்டியின் சடலத்தை பாதையில் கிடத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஒசூா் அருகே ராமாபுரம் கிராமத்தில் மூதாட்டி சின்னத்தாயம்மாள் உடல்நலக் குறைவால் காலமானாா். அவரை உறவினா்கள், கிராம மக்கள் அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால், பொதுப் பாதையை மணிவேல் என்பவா் ஆக்கிரமித்திருந்தா்.

இதனால் மூதாட்டி உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த உறவினா்கள், கிராம மக்கள் சடலத்தை பாதையில் கிடத்தி மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா், காவல் துறையினா் நில உரிமையாளரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து, பாதையை விடுவித்தாா். அதன்பின் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT