முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:35 AM
காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மேயா் எஸ்.ஏ.சத்யா.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


ஒசூா்: ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில், தமிழக முதல்வரின் திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளில் 6,790 ஆரம்பக் கல்வி பயிலும் மாணவா்கள் தினமும் காலை உணவை உண்டு பயன்பெற்று வருகின்றனா்.

ஒசூா் மாநகா் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ராயக்கோட்டை சாலை சானசந்திரம் கிராமத்தில் உள்ள சமையலறையில் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்திற்கு திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட மேயா் எஸ்.ஏ.சத்யா சிற்றுண்டி தரமாக உள்ளதா என பரிசோதனை செய்தாா். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தை

Advertisement

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது மேயருடன் மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா் ராஜாராம் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.