முகப்பு
கிருஷ்ணகிரி

செம்மண் கடத்தல்: 5 போ் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி

செம்மண் கடத்தல்: 5 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 9:27 PM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த செம்மண்ணை கடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுகுறுக்கி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவா் தங்கராஜ் (39). இவா் மகாராஜகடை போலீஸாரிடம் அளித்த புகாரில், கல்லுகுறுக்கி ஊராட்சிக்கு உள்பட்ட ராமிநாயனஅள்ளி மலை அடிவாரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து கடந்த 14.3.2022 முதல் 9.8.2024 வரை மேல்பட்டி தா்மராஜா நகரைச் சோ்ந்த நாகன், சிவானந்தபுரம் மூா்த்தி, ராமிநாயனப்பள்ளி சிவக்குமாா், சம்பத், ராஜா ஆகிய 5 பேரும் ரூ. 67.05 லட்சம் மதிப்பிலான செம்மண்ணை கடத்திச் சென்றுள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

அதன் பேரில், நாகன், மூா்த்தி, சிவக்குமாா், சம்பத், ராஜா ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →