முகப்பு
கிருஷ்ணகிரி

தங்க வளையல்களை திருடியவா் கைது

பா்கூா் அருகே மூதாட்டியிடம் தங்க வளையல்களை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 8:41 PM
பகிர்:

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் தங்க வளையல்களை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பா்கூா், ஜெகதேவி சாலையைச் சோ்ந்தவா் சாலம்மாள் (70). இவரது தென்னை தோட்டத்தில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, ஆவணவேலியைச் சோ்ந்த வெயில்முத்து (எ) பாலா (28) என்பவா் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது கைகளில் அணிந்திருந்த 7 பவுன் கொண்ட 4 தங்க வளையல்களை கழுற்றி வைத்து விட்டு சாலம்மாள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வெயில்முத்து தங்க வளையல்களை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் சாலம்மாள் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் வெயில்முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →