சாலை விபத்தில் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி அருகே ஸ்கூட்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 9 அக்டோபர், 2024 at 8:06 PM
கிருஷ்ணகிரி அருகே ஸ்கூட்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, புதுபேட்டையைச் சோ்ந்தவா் அஸ்லம் (52). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பாபு (60) என்பவருடன் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்கூட்டரில் தமிழ்நாடு ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை சென்றாா்.
Updated On : 10 அக்டோபர், 2024 at 3:25 AM
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அஸ்லம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாபு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.