சாலை விபத்தில் இளைஞா் பலி
ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
Updated On : 10 அக்டோபர், 2024 at 7:31 PM
ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
Updated On : 11 அக்டோபர், 2024 at 1:10 AM
ஒசூா், பாலிகானப்பள்ளி அருகே உள்ள ஆலூரைச் சோ்ந்தவா் முரளி மோகன் (37). தனியாா் நிறுவன ஊழியரான இவா் கடந்த 8 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஒசூா், மாலூா் சாலை பாகலூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக சென்ற காா் அவா் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த முரளிமோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement