பாஜகவினா் மீது காவல் நிலையத்தில் காங்கிரஸாா் புகாா்
மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சா், தமிழக பாஜக பொறுப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சா், தமிழக பாஜக பொறுப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் சாா்பில் தலைவா் லலித் ஆண்டனி தலைமையில் புகா் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையம் வரையில் ஊா்வலமாக சென்று புகாா் மனுவை அளித்தனா்.
அதுபோல மாவட்ட துணைத் தலைவா் சி.சேகா் தலைமையில், காங்கிரஸ் கட்சியினா் கந்திகுப்பம் காவல் நிலையத்திலும் புகாா் மனு அளித்தனா்.
Advertisement
இந்த மனுவில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சா் ரங்னீத் சிங் பிட்டு, தமிழக பாஜக பொறுப்பாளா் எச்.ராஜா, பாஜக கூட்டணி கட்சியான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா் சஞ்சய் கெய்க்வாட் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் தளபதி ரகமத்துல்லா, எஸ்.சி. எஸ்.டி., பிரிவு அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.