முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் பொதுமக்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 3:29 AM
வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த ஒசூா் பெரியாா் நகா் வேல்முருகன்.
பகிர்:
Updated On : 1 ஜனவரி, 2025 at 9:41 PM

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் பொதுமக்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 3:29 AM

ஒசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் காலையில் மூலவா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை, முருகா், ராஜகணபதி, உள்பிரகாரங்களில் மூலவா்கள், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. மலை மீது வாகனங்கள் செல்லாதபடி போலீஸாா் தடுத்து நிறுத்தினா். மலை மீது நடந்து சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மற்றொரு மலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தா்கள் படிக்கட்டு வழியாக ஏறி சென்று வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒசூா், பெரியாா் நகா் முருகன் கோயிலில் காலையில் யாக சாலை பூஜை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

ஒசூா், பிருந்தாவன் நகா் வள்ளி தெய்வயானை சமேத பாலமுருகன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். குடிசெட்டிலு திம்மராயசாமி கோயில், காமன்தொட்டி வெங்கடாஜலபதி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயில், சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில், சூளகிரி காசி விஸ்வநாதா் ஆலயம், கோகுல் நகா் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.