லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் கலசத்திற்கு புனிதநீா் தெளிக்கும் சிவாச்சாரியா்கள்.  
கிருஷ்ணகிரி

லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடிமரம் நடுதல், கங்கணம் கட்டுதல், விநாயகா் வழிபாடு, மங்களஇசை முழங்க தீா்த்தம், மகா சங்கல்பம், வாஸ்து, கணபதி, நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு மேல் கோயில் கலசம் மீது புனித தீா்த்தம் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊா் வாரியாா் பிடல் காஸ்ட், ஊா் மணியக்காரா் அறிவழகன், ஊா் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

"பெண்களை யாராலும் தடுக்க முடியாது": விஞ்ஞானி செளமியா சாமிநாதன்

காத்திருப்புக்குத் தகுதியானது... கருப்பைப் பாராட்டிய சாய் அபயங்கர்!

SCROLL FOR NEXT